பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க தலைவரும், இஸ்ரேலிய எதிர்ப்பு இயக்கங்களின் அதிமுக்கிய தலைவர்களில் முதனமையானவருமாகிய இஸ்ரேலியா இராணுவததால் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஒக்ரொபர் 7ம் திகதி இஸ்ரவேல் நாட்டுக்குள் ஊடுருவி ஹமாஸ் இயக்கம் நடாத்திய படுகொலைகள், மற்றும் பொதுமக்கள் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஆரம்பித்த யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் முதன்மைக் குறியாக விளங்கிய ஹமாஸ் தலைவர் சுமார் ஒருவருட கடல யுத்தத்தின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார்.
ஒக்ரோபர் மாதம் புதன்கிழமை 16ம் திகதி காஸா பகுதியில் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வரின் மரணம் இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்ட மரபணு பரிசோதனையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்குள் புகுந்து எல்லை தாண்டி நடாத்திய கொலைவெறியாட்டத்தில் ஒரே நாளில் 1200 க்கு மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அமெரிக்க பிரஜைகள் உட்பட 200 பொதுமக்கள் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் ஹமாஸ் மீதும் காஸா பெருநகளர் மீதும் மேற்கொண்ட கொடுரமான யுத்தம் மிகப்பெருய மானுட அவலத்தை தோற்றுலித்தது.
ஏறத்தாழ 40000 பலஸ்தீனர்கள், பெரும்பாலும் பொதுமக்கள் கொல்லப்பட்டும், காஸா நகரம் தரை மட்டமாக்கப் பட்டும், இன்னும் தொடரும் யுத்தம் இப்போது எல்லை தாண்டி லெபனானிற்குள்ளும் பரவியுள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் சக்தி வாய்ந்த தலைவரான யஹ்யா கொல்லப்பட்டது ஹமாஸ் இயக்க தலைமையில் பெரும் வெற்றிடமொன்றை உருவாக்கியுள்ளதாகவே கருதப்படுகினறது.
ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலடியாக கடந்த அக்டோபரில் காசாவில் ஹமாஸ் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்துஇ இதில் சுமார் 1இ200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர்இ இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் குறிக்கோள் போராளிக் குழுவை அழிப்பதைத் தவிர வேறில்லை என்று பலமுறை கூறியுள்ளனர்.
ஆனால் இஸ்ரேலுக்கு திரு சின்வரை விட பெரிய இலக்கு எதுவும் இல்லை. பேரழிவிற்குள்ளான பகுதியில் மறைந்திருந்த கடந்த ஓராண்டில்இ அவர் இன்னும் ஹமாஸ் இராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாக மேற்பார்வையிட்டு வருவதாக நம்பப்பட்டது.
அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேலின் இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகள்இ திரு. சின்வாரைத் தேடுவதில் பரந்த வளங்களை அர்ப்பணித்தன. ஆனால் இறுதியில்இ தெற்கு காசாவில் ஒரு நடவடிக்கையின் போது பயிற்சி படை தளபதிகளின் ஒரு பிரிவு எதிர்பாராத விதமாக அவரை எதிர்கொண்டதுஇ நான்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படிஇ கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சின்வர் என்பதனை அவர்கள் அப்போது தெரிந்திருக்கவில்லை.
யஹ்யா சினிவரின் மரணம் பல்லாயிரக்கணக்கான காஸா மக்களைக் கொன்றுஇ இன்னும் பலரை மனிதாபிமான நெருக்கடியில் ஆழ்த்திய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.









