இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ள்ள இந்திய வெளிவிவகார அமை ச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்
சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது. ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக் கவை சந்திக்க முடிந்ததை கௌரவமான விடயமாக கருதுகின்றேன்.
இந்திய குடியரசுதலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்த்துச் செய்தி களை தெரிவித்தேன். இந்திய இல ங்கை உறவுகளிற்கான அவரது அன் பான உணர்வுகளிற்கும் வழிகாட்டு தல்களிற்கும் பாராட்டுக்கள். தற்போதைய ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்குவது குறித்தும் இரு நாடுகளினது மக்களினதும் பிராந்தியத்தினதும் நன்மைக்காக இந்திய இலங்கை உறவுகளை வலுப் படுத்துவது குறித்தும் ஆராய்ந் தோம் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின் னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் விஜயம் என்பதால் இந்த விஜயம் மிகுந்த முக்கியத் துவம் பெறுகின்றது. இந்தியாவின் அயல் நாடுகளிற்கு முன் னுரிமை மற்றும் சாகர் கொள்கை களின் அடிப்படையில் இந்த விஜயம் பரஸ்பர நன்மைக்காக நீண்ட ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும் இரு தரப்புகளினதும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்து ள்ளது. ஜெய்சங்கரின் விஜயம் இரு நாடு களிற்கும் இடையிலான உறவுகளை மீளாய்வு செய்வதுடன் கொழும்பின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் எதிர் கால சாத்தியக்கூறுகள் குறித்து ஆரா யும் வகையில் அமைந்திருக்கும்.
இந்திய முதலீடுகள், பிராந்திய பாது காப்பு, இலங்கையின் சிறுபான்மை தமிழர் தொடர்பான அணுகுமுறை குறித்த அனுரகுமாரதிசநாயக்கவின் நிலைப்பாட்டை புதுடில்லி கேட்ட றிவதற்கான வாய்ப்பாக இந்த விஜயம் காணப்படும். புதன்கிழமை இலங்கை ஜனாதிபதியை சந்தித்த இலங்கை க்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா இலங்கை பிராந்தியத்தில் அமைதி யான ஸ்திரமான நாடாக மாறுவதை இந்தியா பார்க்க விரும்புவதாக தெரி வித்தார். ஊழலிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்தி;ற்கு உத வுவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்திற்கு உதவ தயார் என அவர் தெரிவித்தார்.
இரு நாட்டு வெளிவகார அமைச்சர்கள் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ள்ள இந்திய வெளிவிவகார அமை ச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பேச்வார்ததைகளை மேற் கொண்டுள்ளார் பரஸ்பரம் இரு தரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்து இரு வெளிவிவகார அமை ச்சர்களும் பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தவேளை இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து விஜித ஹேரத்திற்கு உறுதியளித்தேன் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சரு டனான பேச்சுவார்த்தைகளை ©ர்த்தி செய்துள்ளேன். அவருடைய புதிய பொறுப்புகளிற்காக அவருக்கு மீண் டும் வாழ்த்துக்களை தெரிவித்துள் ளேன். இந்திய இலங்கை கூட்டுறவின் பல் வேறு பரிமாணங்களை மதிப்பாய்வு செய்தோம். இலங்கையின் பொருளா தாரத்தை மீள கட்டியெழுப்புவதற் கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து விஜித ஹேரத்திற்கு உறுதியளித்தேன். அயல்நாடுகளிற்கு முன்னுரிமை,எங்கள் இரு நாடுகளின் உறவுகளின் முன்னேறத்தை எப்போ தும் வழி நடத்தும். என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் சார்பில் இந்த அழைப்பிதழை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ளார். இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவி யேற்ற பின்னர் இலங்கைக்கு வந்த உயர்மட்ட இராஜதந்திரி ஆவார்.
இந்தியாவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோக©ர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லி க்கு மேற்கொள்ளவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரதமர், மற்றும் ரணில் விக்கிரமசிங்கா சஜித் பிரேமதாசா ஆகியோரையும் இந்திய வெளிவிவ கார அமைச்சர் சந்தித்திருந்தார்.









