வவுனியாவில் காணாமல் ஆக்கப் பட்ட உறவுகளினால் 01 ஒக்டோ பர் 2024 முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை ஜனாதிபதி அனுரவின் ஆதரவாளர் எனக் கூறிய நபர் ஒருவர் குழப்பியமையால் பதட்டமான நிலமை ஏற்பட்டது. சர்வதேச சிறுவர் தினத்தன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதி யில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அந்த இடத்திற்கு வந்த இனம் தெரியாத நபர் ஒருவர் இது அனுரவின் ஆட்சி நீங்கள் எல்லாம் வயிறு வளர்க்கிறீர்கள். உங்களுக்கு பணம் வருகின்றது. என போராட் டத்தில் ஈடுபட்ட தாய்மாருடன் முரன்பாட்டில் ஈடுபட்டுள்ளார். உங்களை பொலிஸில் பிடித்து கொடுப்பேன். நான் அனுரகுமாரவுடனேயே இருவருடமாக நிற்கிறேன். பொலிஜிம் புலனாய்வு பிரிவும் வந்து இப்போது உங் களை கைது செய்வார்கள். நாய் களே எல்லாரும் வீடு செல்லுங்கள் என்று ஒருமையில் கண்டபடி திட்டியுள்ளார். இதனையடுத்து காணாமல் போன உறவுகளும் அவருடன் முரன்பாட்டில் ஈடு பட்டுள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன் சிறிது நேரத்தின் பின்னர் குறித்த நபர் அவர்களை அச்சுறுத்தியபடி அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அன்று மாலையே எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர். அவ் வாறான செயற்பாடொன்றே இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தின் போதும் நடந்தது என தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், செவ்வாய்க்கிழமை காலை காணா மல் ஆக்கப்பட்டோரின் உறவினர் கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் இடைåறு ஏற்படுத் தியதோடு தாம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் என பொய்யாக கூறி எமது கட்சிக்கு உள்ள நற்பெயரை கலங்கப்படுத்த வும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கோடும் செயற்பட்டிருந்தனர்.
தற்போது தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படு கின்ற ஆதரவையும் நல்ல எண் ணத்தினையும் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இவ்வாறு கீழ்த்தரமான செயலில் ஈடுபட் டதை எண்ணி மனவருத்தமடை கின்றோம். இனி வரும் காலங்களில் இவ் வாறான செயற்பாடு இடம் பெறாத வகையில் எமது அரசாங்கம் அதனைப் பார்த்துக் கொள்ளும். தேர்தல் நெருங்கி வரும் காலங் களில் இவ்வாறான சேறு ©சும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நாங்கள் தமிழ் மக்களிடமும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் களிடமும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.









