March 1, 2026

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராகப் போராடிய 5 பேருக்கு எதிரான வழக்கில் சுமந்தின் தலைமையில் 13 சட்டத்தரணிகள் முன்னிலையானார்கள்!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியமைக்காக வேலன் சுவாமிகள் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மற்றும் 05 ஜனவரி 2026 திங்கட் கிழமை பொலிஸார் குற்றப்பத்திரத் தினைத் தாக்கல் செய்ததன் மூலம் தொடுக்கப்பட்ட வழக்குகளில் குற்ற ஞ்சாட்டப்பட்டவர்களை சொந்தப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு வழக்கு தவணை யிடப்பட்டுள்ளது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய நிலை யில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வேலன் சுவாமிகள் காணி உரிமையாளர் சாருஜன் உள்ளிட்ட ஐவர் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப் பட்டனர்.

அவர்கள் விடுவிக்கப்படுகையில் எதிர் வரும் ஜனவரி 26ஆம் திகதி வழக்கு தவணையிடப்பட்டது. எனினும் ஏற்கனவே கைதான ஐவரையும் 05 ஜனவரி 2026 திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அதற்கு மேலதிகமாக குற்றப்பத்திரம் தாக்கள் செய்யப்பட்டு ஏலவே கைதாகி பிணையில் விடுவிக்கப் பட்ட வேலன் சுவாமிகள், தவிசாளர் நிரோஷ் உள்ளிட்ட ஐவரையும் உள்ளடக்கி மேலதிகமாக வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன், போராட்டத்தில் பங்கு கொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள், போராட்டத்தில் பங்கெடுக்கும் செயற் பாட்டளர்கள் எனப் பலரையும் உள்ளடக்கி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன் ஏற்கனவே தையிட்டி தொடர்பான வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்குகளில் ஜனாதிபதி சட்டத் தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா, சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடி வேல் குருபரன் தலைமையில் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சார்பாக 13 சட்டத்தரணிகள் கொண்ட குழாம் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகினர்.

இவ்வழக்குகளில் பொலிஸ் தரப்பினர் நீதிமன்ற கட்டளையினை போராட்டக்காரர்கள் மீறினர் என்றும் இனநல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தினர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனை கடுமையாக ஆட்சேபித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அமைதியான வழியில் இடம் பெற்ற போராட்டத்தினை அடக்கி இருக்கக் கூடாது என்றும் பொலிஸாரே சட்டத்தினை மீறியுள்ள னர் என்றும் ஏற்கனவே 1993ஆம் ஆண்டு இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முன் வைக்கப்பட்ட வழக்குகளில் போராடுவதற்கு உள்ள உரிமை உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளை முன்வைத்து வாதிட்ட துடன் இவ்வாறானதோர் வழக்கினை தாக்கல் செய்வதற்கு பொலிஸாருக்கு உரிமையில்லை என்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தனது சட்ட ரீதியிலான அதிகாரத்தினை பிரயோகிக்கும் போது அதனை தடுக்கும் வகையில் சட்டவிரோத கடிதம் ஒன்றை பொலிஸார் அனுப்பியுள்ளனர். மேலும் இங்கு பொலிஸாரே அங்கு வன்முறையினைத் தூண்டும் வகை யில் தேடித் தேடி கைதுகளை மேற் கொண்டதாகவும் வாதிட்டார்.

மேலும் பொலிஸாரின் கைதுகளின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கள் தொடர்பாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தாக்கப்பட்டமை தொடர் பான மருத்துவ அறிக்கையினையும் மன்றில் காண்பித்து வாதங்களை முன் வைத்தார்.

இதணைத் தொடர்ந்து வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி குமாரவடி வேல் குருபரன் இங்கு குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 106 இன் கீழ் தொல்லைகள் பற்றிய அவசர விடயங்களில் தற்காலிக கட்டளைகள் 14 நாட்களுக்கு அதிக மாக வலுவுடையதாக இருத்தல் ஆகாது என மேலும் சட்டத்தீர்ப்புக்களை முன்வைத்து இவ்வழக்கினை முடிவுறுத்துமாறு கோரி வாதிட்டார்.

சிரேஷ்ட சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா இவ்வழக்கில் பொதுத் தொல்லைகள் மீதே இவ்வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதால் இவ்வழக் கினை பொலிஸார் இவ்வாறாகத் தாக்கல் செய்திருக்க முடியாது எனவும் பொலிஸாரே அமைதிக்குப் பங்கம் விளைவித்தனர்.

இது சாதராணமாக பொலிஸார் மேலிட உத்தரவின் பிரகாரமே மேற் கொண்ட நடவடிக்கை எனவும் சாதாரணமாக இடம் பெறுகின்ற பொதுத் தொல்லைகள் தொடர்பாக பிரயோகிக்கப்படக் கூடிய சட்டம் ஒன்றை மக்களின் ஐனநாயக உரிமை களில் பங்கம் ஏற்படுத்துவதற்காகப் பிரயோகிக்க முடியாது எனவும் சட்ட ரீதியிலான பொலிஸாரின் தவறுகளை முன்நிறுத்தி வாதிடப்பட்டது.

பின்னரான நிலைமைகளில் தொடர்ச்சி யாக இவ்விடயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவ்வழக்கு களிலும் சட்டத்தரணிகளால் பொலி ஸார் மன்றில் முன்வைத்த குற்றச் சாட்டுக்களை சட்டத்தரணிகள் நிராகரித்தனர். இந்நிலையில் எதிர் வரும் 26ஆம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்