டெல்லி – இஸ்லாமாபாத் இடையே வெடித்த இராஜதந்திரப் போர்!
புதுடெல்லி:
ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி (Amir Khan Muttaqi) அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம், பிராந்திய அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாகவும், அதேசமயம் பாகிஸ்தானுக்குப் பெரும் கோபமூட்டும் நிகழ்வாகவும் மாறியுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த மிக உயர்மட்டத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் ஆப்கான் வெளியுறவு அமைச்சர் முத்தக்கி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதற்கும், ஆப்கான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைத் தொடர்வதற்கும் இந்தியா உறுதி அளித்தது. குறிப்பாக, காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்பப் பிரிவு, முழுமையான தூதரகமாகத் தரம் உயர்த்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டது. அத்துடன், 20 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பாக வழங்குவதாகவும் இந்தியா அறிவித்தது.
பாகிஸ்தானின் கோபத்திற்குக் காரணங்கள்:
முத்தக்கியின் இந்திய விஜயம் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான கூட்டறிக்கை ஆகியவை பாகிஸ்தானுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணிகள்:
காஷ்மீர் பற்றிய குறிப்பு: இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான கூட்டறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் குறித்து செய்யப்பட்ட ஒரு குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறுவதாக உள்ளது என்று பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்துள்ளது.
பயங்கரவாதம் குறித்த எச்சரிக்கை: முத்தக்கி இந்திய மண்ணில் இருந்து பேசியபோது, எல்லை தாண்டிய பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானை நோக்கி, “ஆப்கானிஸ்தானுடன் ‘விளையாடுவதை நிறுத்துங்கள்’” (ளுவழி pடயலiபெ பயஅநள) என்று வெளிப்படையாகவே எச்சரித்தது, இஸ்லாமாபாத்தை மிகவும் ஆத்திரமூட்டியுள்ளது. பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை தான் பயங்கரவாதம் என்ற முத்தக்கியின் கருத்தையும் அது நிராகரித்தது.
வளரும் இராஜதந்திர உறவு: தலிபான் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த இந்தியா, தற்போது அவர்களுடன் உறவுகளை மேம்படுத்தத் தொடங்கியிருப்பது, ஆப்கானிஸ்தான் மீது தனது செல்வாக்குக் குறையும் என்று கருதும் பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பதில்: வான்வழித் தாக்குதல் மற்றும் கண்டனம்
முத்தக்கி டெல்லியில் இருக்கும்போதே, பாகிஸ்தான் தனது எல்லையோரப் பகுதியான ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தானிய தலிபான் (வுவுP) அமைப்பை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் கூட்டறிக்கை வெளியான சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், ஆப்கானிஸ்தான் தூதரை அழைத்து தனது “கடும் ஆட்சேபனையை” அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிடி போன்ற முக்கியப் பிரபலங்களும், பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் அளித்த ஆதரவை அவர்கள் “மறந்துவிட்டார்கள்” என்றும், இந்தியாவுடன் உறவை வளர்ப்பது தவறு என்றும் விமர்சித்துள்ளார்கள்.
மொத்தத்தில், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சரின் ஒரு வார கால டெல்லி விஜயம், இந்தியா-ஆப்கான் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளதோடு, இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் பிராந்திய சமநிலையில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.
ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு, அந்த அரசின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வப் பயணம இதுவாகும். ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசின் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தக்கி, அக்டோபர் 9 முதல் 16 வரை ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றார். சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்த இந்தப் பயணம், இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்தியப் புவிசார் அரசியல் சூழலில் ஒரு திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியா, தாலிபான் ஆட்சியை இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நடைமுறைத் தொடர்பை வலுப்படுத்தியுள்ளது.
உயர்மட்டச் சந்திப்புகள் மற்றும் ராஜதந்திர உறுதிமொழிகள்
திரு. அமீர் கான் முத்தக்கி, டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பயணத்தின் மிக முக்கியமான அம்சம், இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான உறவு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த தங்கள் நிலைப்பாடுகளைத் தெளிவாகப் பரிமாறிக்கொண்டதுதான். இரு நாடுகளுக்கும் இடையேயான நீடித்த நட்பு, கலாசார மற்றும் வரலாற்றுப் பிணைப்புக்கள் குறித்து ஜெய்சங்கர் வலியுறுத்தினார். மேலும், ஆப்கானிய மக்களின் வளர்ச்சித் தேவைகளுக்காக இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்ற உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். இந்தச் சந்திப்புகளின் முடிவில், காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்பப் பணியகத்தை முழுத் தூதரக நிலைக்கு மேம்படுத்துவதாக இந்தியா அறிவித்தது. இது தாலிபான் அரசுடனான தொடர்பை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான ராஜதந்திர நடவடிக்கை ஆகும். ஆப்கானிஸ்தானின் பிராந்தியத்தை எந்த ஒரு நாட்டிற்கும் எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், இந்தியாவை ஒரு நெருங்கிய நண்பராகப் பார்ப்பதாகவும் முத்தக்கி, இந்தியாவுக்குத் திட்டவட்டமான உறுதிமொழி அளித்தார். இரு நாடுகளின் பாதுகாப்பு நலன்களின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
வர்த்தகம், முதலீடு மற்றும் மனிதாபிமான உதவி
ஆப்கானிஸ்தானில் சுமார் 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இந்தியா முதலீடு செய்துள்ளது. இந்த அடிப்படையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் மேம்படுத்துவது குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்க வாய்ப்புகளை ஆராய இந்திய நிறுவனங்களுக்கு முத்தக்கி அழைப்பு விடுத்தார். இரு நாட்டு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், காபூலுக்கும் புது டெல்லிக்கும் இடையே கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டது குறித்தும் அமைச்சர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மனிதாபிமான உதவிகளைப் பொறுத்தவரை, அண்மையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இந்தியா அளித்த உடனடி நிவாரணப் பொருட்களுக்கு முத்தக்கி நன்றி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்தியா உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜெய்சங்கர் தனது பங்கிற்கு உறுதி அளித்தார்.
சர்ச்சையும் தெளிவின்மையும்: பெண் பத்திரிகையாளர்கள் விவகாரம்
முத்தக்கியின் இந்தப் பயணத்தின்போது, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தச் செயல், இந்தியாவில் உள்ள பெண்ணியவாதிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே கடும் கண்டனத்தைப் பெற்றது. ஆனால், இந்தச் சர்ச்சை தொடர்பாக முத்தக்கி பின்னர் விளக்கம் அளிக்கும்போது, பெண் நிருபர்கள் விலக்கப்பட்டது வேண்டுமென்றே அல்ல என்றும், இது குறுகிய அறிவிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டதால் ஏற்பட்ட ஒரு “தொழில்நுட்பப் பிரச்சினை” என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து நடந்த சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம், தாலிபான் ஆட்சியின் கீழ் பெண்களின் உரிமை குறித்த கேள்விகளையும், இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் அதன் பிரதிநிதிக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றிய விவாதங்களையும் எழுப்பியது.
பிராந்திய சமநிலையில் திருப்புமுனை
முத்தக்கி மீது ஐக்கிய நாடுகள் சபையின் பயணத் தடை அமுலில் இருந்த நிலையில், இந்தியாவின் கோரிக்கையின் பேரிலேயே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழு அவருக்குப் பயண விலக்கு அளித்தது. இது சர்வதேச அரங்கில் இந்தியாவின் ராஜதந்திர செல்வாக்கு உயர்ந்திருப்பதை காட்டியது. மேலும், பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், தாலிபான் அமைச்சரின் இந்திய வருகை, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கிற்குப் போட்டியாக இந்தியா தனது நலன்களை நிலைநிறுத்த எடுத்துள்ள ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
1999-ம் ஆண்டிற்குப் பிறகு தாலிபான் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வந்திருப்பது, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஒரு புதிய பாதையைத் திறக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் இந்த நடவடிக்கையானது, ஆப்கானிய மக்களுடனான தொடர்பைப் பேணுவதற்கும், பிராந்திய பயங்கரவாத அச்சுறுத்தலைக் கூட்டாக எதிர்கொள்வதற்கும் அவசியமானது என்று இந்தியா கருதுகிறது.
விலை உயர்வால் தொழில் துறைக்கு பேராபத்து ஏற்படும் அபாயம் – அரசாங்கத்தின் மௌனம் தொடர்கிறது
கொழும்பு: உலக சந்தையில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறை, தங்கத்திற்கான இறக்குமதி வரியை உடனடியாகக் குறைக்க வேண்டும் என அரசாங்கத்திடம் மீண்டும் ஒருமுறை அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதுள்ள 15 சதவீத இறக்குமதி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம் (CGJTA) இந்த வரியைக் குறைப்பதற்கான தமது விரிவான கோரிக்கைகளை சில மாதங்களுக்கு முன்னரே நிதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளன. இருந்தபோதும் அக்டோபர் 19, 2025 வெளியான செய்திகளின்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்ந்துள்ள பின்னணியில், தமது கோரிக்கையை வர்த்தகர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சு ‘அனுதாபம்’ காட்டுவதாகவும், அவற்றைக் கவனிப்பதாகவும் தெரிவித்துள்ள போதிலும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையோ அல்லது உறுதியான முடிவோ எடுக்கப்படவில்லை என்று CGJTA தலைவர் ரிஸ்வான் நயீம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விலையேற்றத்துடன், ஏப்ரல் 2018 இல் விதிக்கப்பட்ட 15% இறக்குமதி வரியும், அத்துடன் கடந்த ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்த 18 சதவீத பெறுமதி சேர் வரியும் (VAT) சேர்வதால், இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது உள்ளூர் விலையை சர்வதேச விலையை விட மிகவும் அதிகமாக ஏற்றியுள்ளது.
தொடர்ந்து வரும் விலை உயர்வு காரணமாக கிட்டத்தட்ட 3 இலட்சம் பேருக்கு வேலை வழங்கும் இந்தத் துறையில் பலர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை நகைக்கடை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் இராமன் பாலசுப்ரமணியம் எச்சரித்துள்ளார்.
அதிகரிக்கும் சட்டவிரோத கடத்தல்:
15% வரி விதிக்கப்பட்டதற்கான முக்கியக் காரணம், சட்டவிரோத தங்கக் கடத்தலைத் தடுப்பதாகும். இருப்பினும், அதிக வரி சட்டபூர்வமான வணிகங்களைப் பாதித்ததோடு, சட்டவிரோத கடத்தலைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசாங்கத்தின் வருவாய்:
வரியை 15% இலிருந்து 5% ஆகக் குறைத்தால், சட்டபூர்வமான இறக்குமதியின் அளவு அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் அரசாங்கத்திற்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் வர்த்தகத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
திருமணம் போன்ற பாரம்பரிய நிகழ்வுகளுக்குத் தங்கம் வாங்குவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு வரி குறைப்பு குறித்த முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே வர்த்தகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு உதவும் வகையில் 6.5 பில்லியன் டொலர்களுக்கும் மேலான உதவித் திட்டத்தை கனடா அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. மேலும் வேலையிழப்பு காப்பீட்டு விதிகளிலும் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கனனேடிய தயாரிப்புகளுக்கான புதிய புதிய சந்தைகளை கண்டுபிடிக்கவும், அமெரிக்க வரிகளின் தாக்கங்களுக்கு பதிலளிக்கவும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளில் 5 பில்லியன் டொலர்களை செலவிட கனேடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க வரிகளால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் உள்ள வணிகங்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன்களை வழங்க 500 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளது.
கனடாவின் விவசாயம் மற்றும் உணவுற்பத்தித்துறையில்; ஏற்படக்கூடிய பணப்புழக்கச் சவால்களுக்கு உதவும் வகையில் ஃபார்ம் கிரெடிட் கனடா மூலம் கூடுதலாக 1 பில்லியன் கடன் வழங்கப்படும்.
தொழிலாளர் அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் செய்தியாளர்களிடம் கூறுகையில் எங்கள் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், இந்த நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்பதற்கும் அரசாங்கம் என்ற முறையில் நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை இன்று நான் கோடிட்டுக் காட்டுகிறேன். எந்த சூழ்நிலையிலும் அவர்களைக் காப்பாற்றுவோம் என்று அவர் சூளுரைத்தார். அவருடன் சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி என்.ஜி மற்றும் சிறு வணிக அமைச்சர் ரெச்சி வால்டெஸ் ஆகியோரரும் உடனிருந்தனர்.
குறிப்பாக தொழிலாளர்களுக்காக கனடாவின் தொழிலிழந்தோர் வேலைப் பகிர்வு திட்டத்தை எளிதாக்கும் தற்காலிக மாற்றங்களை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
மெக்கின்னன் கூறுகையில் வேலைப் பகிர்வு திட்டம் பரவலாக அறியப்பட்ட திட்டம் அல்ல. ஆனால் இது ஒரு முக்கியமான திட்டம். வேலையின்மை இல்லாமல் தொழிலாளர்களை பணியில் வைத்திருக்க இந்த திட்டம் உதவுகிறது. ஊழியர்களின் வேலை நேரத்தை தற்காலிகமாக குறைப்பதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் வரை தொழிலாளர்கள் பணியில் இருப்பார்கள்”.
இந்த மாற்றங்களில் ஒப்பந்தங்களின் அதிகபட்ச காலத்தை 38 வாரங்களில் இருந்து 76 வாரங்களாக அதிகரிப்பது லாப நோக்கமுள்ள மற்றும் தொண்டு நிறுவனங்கள் பருவகால வேலைகளில் பணிபுரிபவர்கள் போன்றோரும் இந்த திட்டத்தில் பயனடையலாம்.
ஏற்றுமதி மேம்பாட்டு கனடாவின் 5 பில்லியன் திட்டம் குறித்து என்.ஜி கூறுகையில்இ நிறுவனங்கள் தற்போதுள்ள ஒப்பந்தங்களை நிர்வகிக்கவும் அமெரிக்க விற்பனையில் ஏற்படக்கூடிய குறைவுகளைச் சமாளிக்கவும் உதவும். மேலும் பொருட்களை அனுப்பும்போது அல்லது சர்வதேச அளவில் சேவைகளை வழங்கும் போது வெளிநாட்டு வாடிக்கையாளர்களினால் பணம் செலுத்த முடியாமல் போனால் ஏற்படும் இழப்புகளிலிருந்து நிறுவனங்களைப் பாதுகாக்க கடன் காப்பீடு வழங்கப்படும். செலவுகளை நிலைப்படுத்தவும் பாதகமான நாணய நகர்வுகளிலிருந்து லாப வரம்புகளைப் பாதுகாக்கவும் நாணய பரிமாற்ற வசதி உத்தரவாதமும் வழங்கப்படும்”.
புதிய நிதியாக கூ500 மில்லியன் வழங்கும் கனடா வணிக மேம்பாட்டு வங்கி (டீனுஊ) அமெரிக்க வரிகள் காரணமாக ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அல்லது செலவுகள் அதிகரித்தாலோ, நிதி ரீதியாக நேரடி பாதிப்புகளை சந்தித்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த உதவி கிடைக்கும என்று தெரிவித்துள்ளது.
சில கனடிய பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளுக்கு ஏப்ரல் 2 வரை தற்காலிக விலக்கு அளிக்கப்படும் என்று ட்ரம்ப் வியாழக்கிழமை அறிவித்தார். அதன்பிறகு உலகளாவிய இறக்குமதிகள் மீது வரிகள் விதிக்கப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்தார். இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது அடுத்த வாரம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ள 25 சதவீத வரிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
கனடாவின் பால் பொருட்கள் மீது 250 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கனடாவின் மரத் தொழில் துறையையும் குறிவைத்துள்ளதாகவும் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய சட்ட மாற்றங்கள் தேவையில்லாமல் வேலையிழப்போர்;க்கான காப்புறுதி நடவடிக்கைகளை செயல்படுத்த முடியும் என்று மெக்கின்னன் வெள்ளிக்கிழமை கூறினார். ஜனவரி மாதம் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் மார்ச் 24 வரை பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
மேலும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேர்தல் நெருங்கினால் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் என்ற கேள்விக்கு அமைச்சர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அமைச்சர்களாகவே இருப்பார்கள். ஆனால் முக்கியமான முடிவுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பது மரபு. அது அவசரநிலைகளுக்கு பொருந்தாது” என்று மெக்கின்னன் கூறினார்.
முழு அளவிலான வரிகள் மற்றும் முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரம் ஆகியவை தற்போதைக்கு “கருத்தியல்” ஆக இருந்தாலும்இ அமெரிக்காவின் பதிலடிக்கு கனடாவின் பதில் ஒரு பெரிய விவாதமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ட்ரம்ப்பின் மிரட்டல்களுக்கு பதிலளிக்கும் வகையில்இ என்டிபி தலைவர் ஜெக்மீத் சிங் தனது கட்சியின் “தொழிலாளர்களுக்கு முன்னுரிமை” திட்டத்தை வெளியிட்டார். அதில் நுஐ ஐ அணுகுவதில் உள்ள தடைகளை நீக்குவதுஇ “ஆபத்தில் உள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு” சலுகைகளை அறிமுகப்படுத்துவதுஇ சலுகைகளின் காலத்தை 50 வாரங்களாக நீட்டிப்பதுஇ ஒரு வார காத்திருப்பு காலத்தை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் அடங்கும்.
பந்து ஒவ்வொரு நாளும் துள்ளிக் கொண்டே இருப்பதால தான் மேலும் மாற்றங்களை அறிமுகப்படுத்தவில்லை என்று மெக்கின்னன் கூறினார்.
அமெரிக்காவிலிருந்து வரிகள் விதிக்கப்பட்டாலும், விதிக்கப்படாவிட்டாலும், எங்கள் பதில்களைத் தனிப்பயனாக்க நாங்கள் விரும்புகிறோம். இந்த வரிகள் கனடா மீது சுமத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் முதல் கடமை” என்று மெக்கின்னன் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதி உடன்பாடு எட்டப்படும் வரை ரஷ்யா மீது பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தற்போது உக்ரைனை போர்க்களத்தில் கடுமையாக தாக்கி வருகிறது என்றும் இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் இதற்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை புகழ்ந்து பேசியிருந்தார். உக்ரைன் தலைவர்தான் ரஷ்யாவுடன் அமைதிக்கு விரும்பவில்லை என்று பொய்யான குற்றத்தினை சுமத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது அவருடைய கருத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைனுடன் உறவை கையாள்வது கடினமாக இருக்கிறது என்றும் ரஷ்ய அதிபர் புடின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் மீண்டும் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்;ளைமாளிகை அலுவலகத்தில் கடுமையாக விமர்சித்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெலென்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்ததோடு, உக்ரைன்தான் போரை ஆரம்பித்தது என்றும் குற்றம் சாட்டினார். உக்ரைன் போர் பிப்ரவரி 24, 2022 அன்று புடினால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கி வந்த இராணுவ உதவி மற்றும் உளவுத் தகவல்களை நிறுத்தி வைத்துள்ளது. இது ரஷ்யா, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து பெரிய அளவிலான ஏவுகணை மற்றும ட்ரோன்; தாக்குதல் நடத்த காரணமாக அமைந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை காலை, டிரம்ப் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். ரஷ்யா, உக்ரைனை கடுமையாக தாக்கி வருகிறது என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் தெரிவித்தார்.
உக்ரைனுடனான இராணுவ ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தியதால்தான் புடின் இவ்வாறு செயல்படுகிறாரா என்ற கேள்விக்கு, யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள் என்று டிரம்ப் பதிலளித்தார். மேலும் உக்ரைன் சமாதானத்திற்கு தயாராக இருக்கிறதா என்பதை நான் அறிய விரும்புகிறேன். ஆனால் அவர்கள் தயாராக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய அவரது றுத் வலைத்தளத்தில் பதிவு செய்த கருத்தில், டிரம்ப், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதி உடன்பாடு எட்டப்படும் வரை ரஷ்யா மீது பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள், தாமதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
இந்த பொருளாதாரத் தடைகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து எந்த தகவலும் அவர் வெளியிடவில்லை.
ரஷ்யா ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறிவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எண்ணெயை விற்பனை செய்து, கஜகஸ்தான் போன்ற நாடுகள் மூலம் மேற்கு நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து தடைகளை சமாளித்து வருகிறது.
சீனா, ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களை வழங்கி உதவி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் சீனா இதனை மறுத்துள்ளது.
அமைதி உடன்படிக்கைக்கான அழுத்தம் உக்ரைன் மீது மட்டுமே செலுத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. டிரம்ப்பின் இந்த அச்சுறுத்தல் ஒரு சமநிலையை காட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம்.
டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் ரஷ்ய அதிபருடன் 90 நிமிடம் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்திருந்தார். அந்த தொலைபேசி உரையாடலில் என்ன விவாதிக்கப்பட்டது, என்ன உடன்பாடுகள் எட்டப்பட்டன என்பது இதுவரை வெளிவரவில்லை.
தற்போதைய சூழலில் விளாடிமிர் புடின் ஒரு புத்திசாலியான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார். டிரம்பின் இந்த பொருளாதாரத் தடை அச்சுறுத்தல் புடினுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கையின் 77வது சுதந்திர தினம் எதிர்வரும் 04ம் தேதி (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்று வரை நீதி கிடைக்காத பின்னணியில், தமக்கு சுதந்திர தினம் கிடையாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்னையை அடுத்து இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றஞ்சுமத்தி, யுத்தம் முடிவடைந்த காலம் தொடக்கம் இன்று வரை அவர்களின் உறவினர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக லிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை அளித்து அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இம்முறை வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் அரசாங்கத்துக்கு வாக்களித்து, தற்போது அதே அரசுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்த முற்படுகின்றனர். 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக மட்டக்களப்பு தவிர்த்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை தன்வசப்படுத்தியது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் தமக்கான தீர்வை வழங்குமாறு கோரி, கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது மாத்திரமன்றி, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர்.
எனினும், இம்முறை அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்துவிட்டு, அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் முன்வந்துள்ளனர். இந்த நிலையில், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் எதிர்வரும் 4ம் தேதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகள் விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் படி, கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25% வரி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும். கனடிய எரிசக்தி வளங்களுக்கு (மின்சாரம், இயற்கை எரிவாயு, எண்ணெய்) குறைவான 10% வரி விதிக்கப்படும். இந்த வரிகள் பிப்ரவரி 4, 2025 முதல் அமலுக்கு வரும்.
இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்க, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் $107 பில்லியன் மதிப்புள்ள பொருட்களுக்கு 25% பதிலடி வரிகள் விதிக்க இருப்பதாக அறிவித்தார். இந்த பதிலடி வரிகள், அமெரிக்காவின் முக்கிய தொழில்நிறுவனங்கள் மற்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களை குறிவைத்து அமல்படுத்தப்படுகின்றன.
இந்த வரி போர் இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தும். அமெரிக்காவில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார், எரிபொருள், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் உயரக்கூடும், இதனால் நுகர்வோர் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மறுபுறம், கனடாவில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், மது, மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம். இது கனடிய நுகர்வோரின் செலவுகளை உயர்த்தும்.
மேலும், இந்த வரிகள் இரு நாடுகளின் தொழில்நிறுவனங்களின் சப்ளைச் சங்கிலிகளை பாதிக்கக்கூடும், இதனால் வேலைவாய்ப்புகள் குறையலாம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தமாகலாம்.
இரு நாடுகளும் இந்த வரி போரின் விளைவுகளை குறைக்க மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் $107 பில்லியன் மதிப்புள்ள பொருட்களுக்கு பதிலடி வரிகள் விதிக்க இருப்பதாக அறிவித்தார்.
இந்த பதிலடி வரிகள் அமெரிக்காவின் முக்கிய பொருட்களை குறிவைக்கின்றன, அவற்றில்:
பீர், வைன், மற்றும் பூர்பன் போன்ற மது வகைகள்
பழங்கள்
வீட்டு உபயோக சாதனங்கள்
இந்த வரிகள் பிப்ரவரி 4, 2025 முதல் அமலுக்கு வரும், மேலும் 21 நாட்களில் முழுமையாக செயல்படுத்தப்படும்.
ட்ரூடோ, அமெரிக்கர்களுக்கு இந்த வரிகள் அவர்களின் வேலைவாய்ப்புகளை பாதிக்கக்கூடும் மற்றும் வாழ்க்கைச் செலவுகளை உயர்த்தக்கூடும் என்று எச்சரித்தார். மேலும், கனடா முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தி கொள்முதல் போன்ற துறைகளில் வரி அல்லாத நடவடிக்கைகளையும் பரிசீலிக்கலாம் என்று குறிப்பிட்டார்.
கனடாவின் இந்த பதிலடி நடவடிக்கைகள், அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களை குறிப்பாக பாதிக்கும் வகையில் அமல்படுத்தப்படுகின்றன.
மேலும், கனடா மற்றும் மெக்சிகோ, அமெரிக்காவின் முக்கிய தொழில்நிறுவனங்கள் மற்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களை குறிவைத்து அமல்படுத்தப்படுகின்றன.
இந்த வரி போர் இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தும். அமெரிக்காவில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார், எரிபொருள், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் உயரக்கூடும், இதனால் நுகர்வோர் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மறுபுறம், கனடாவில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், மது, மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம். இது கனடிய நுகர்வோரின் செலவுகளை உயர்த்தும்.
மேலும், இந்த வரிகள் இரு நாடுகளின் தொழில்நிறுவனங்களின் சப்ளைச் சங்கிலிகளை பாதிக்கக்கூடும், இதனால் வேலைவாய்ப்புகள் குறையலாம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தமாகலாம்.
இரு நாடுகளும் இந்த வரி போரின் விளைவுகளை குறைக்க மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க தலைவரும், இஸ்ரேலிய எதிர்ப்பு இயக்கங்களின் அதிமுக்கிய தலைவர்களில் முதனமையானவருமாகிய இஸ்ரேலியா இராணுவததால் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஒக்ரொபர் 7ம் திகதி இஸ்ரவேல் நாட்டுக்குள் ஊடுருவி ஹமாஸ் இயக்கம் நடாத்திய படுகொலைகள், மற்றும் பொதுமக்கள் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஆரம்பித்த யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் முதன்மைக் குறியாக விளங்கிய ஹமாஸ் தலைவர் சுமார் ஒருவருட கடல யுத்தத்தின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார்.
ஒக்ரோபர் மாதம் புதன்கிழமை 16ம் திகதி காஸா பகுதியில் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வரின் மரணம் இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்ட மரபணு பரிசோதனையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்குள் புகுந்து எல்லை தாண்டி நடாத்திய கொலைவெறியாட்டத்தில் ஒரே நாளில் 1200 க்கு மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அமெரிக்க பிரஜைகள் உட்பட 200 பொதுமக்கள் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் ஹமாஸ் மீதும் காஸா பெருநகளர் மீதும் மேற்கொண்ட கொடுரமான யுத்தம் மிகப்பெருய மானுட அவலத்தை தோற்றுலித்தது.
ஏறத்தாழ 40000 பலஸ்தீனர்கள், பெரும்பாலும் பொதுமக்கள் கொல்லப்பட்டும், காஸா நகரம் தரை மட்டமாக்கப் பட்டும், இன்னும் தொடரும் யுத்தம் இப்போது எல்லை தாண்டி லெபனானிற்குள்ளும் பரவியுள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் சக்தி வாய்ந்த தலைவரான யஹ்யா கொல்லப்பட்டது ஹமாஸ் இயக்க தலைமையில் பெரும் வெற்றிடமொன்றை உருவாக்கியுள்ளதாகவே கருதப்படுகினறது.
ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலடியாக கடந்த அக்டோபரில் காசாவில் ஹமாஸ் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்துஇ இதில் சுமார் 1இ200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர்இ இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் குறிக்கோள் போராளிக் குழுவை அழிப்பதைத் தவிர வேறில்லை என்று பலமுறை கூறியுள்ளனர்.
ஆனால் இஸ்ரேலுக்கு திரு சின்வரை விட பெரிய இலக்கு எதுவும் இல்லை. பேரழிவிற்குள்ளான பகுதியில் மறைந்திருந்த கடந்த ஓராண்டில்இ அவர் இன்னும் ஹமாஸ் இராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாக மேற்பார்வையிட்டு வருவதாக நம்பப்பட்டது.
அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேலின் இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகள்இ திரு. சின்வாரைத் தேடுவதில் பரந்த வளங்களை அர்ப்பணித்தன. ஆனால் இறுதியில்இ தெற்கு காசாவில் ஒரு நடவடிக்கையின் போது பயிற்சி படை தளபதிகளின் ஒரு பிரிவு எதிர்பாராத விதமாக அவரை எதிர்கொண்டதுஇ நான்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படிஇ கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சின்வர் என்பதனை அவர்கள் அப்போது தெரிந்திருக்கவில்லை.
யஹ்யா சினிவரின் மரணம் பல்லாயிரக்கணக்கான காஸா மக்களைக் கொன்றுஇ இன்னும் பலரை மனிதாபிமான நெருக்கடியில் ஆழ்த்திய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்திய அரசாங்கத்தை எதிர்கொள்வது அவசியம் என்று நாங்கள் உணர்ந்தோம் என்று ஆர். சி. எம். பி ஆணையர் மைக் டுஹெம் திங்களன்று அறிவித்தார்”.
கனேடிய மண்ணில் வன்முறை மற்றும் கொலைச் சதித் திட்ட்ம் தீட்டியமை தொடர்பாக கனாடாவிற்கான இந்தியத் தூதுவர் உட்பட மேலம் சில இரஜதந்திரிகள் நாட்டை வநட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். இந்தியாவின் மோடி அரசாங்கத்திற்கும், கனடாவின் ரூடோ அரசாங்கத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் மேலும் விரிசலை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, இந்திய அரசாங்கத்தின் இராஜதந்திரிகள் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களை ஆர். சி. எம். பி சுமத்தியுள்ளது.
இந்திய அரசாங்கத்தை எதிர்கொள்வதும்இ எங்கள் விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சில பாரதூரமான கண்டுபிடிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதும் அவசியம் என்று நாங்கள் உணர்ந்தோம் என்று ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் கமிஷனர் மைக் டுஹெம் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ பதவிகளை பயன்படுத்தி இந்திய அரசாங்கத்திற்கு நேரடியாகவோ அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மூலமாகவோ தகவல்களைச் சேகரிப்பது போன்ற இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று அவர் கூறினார்.
இருப்பினும்இ ஆர். சி. எம். பிஇ இந்த வன்முறைச் செயல்கள்இ குற்றச் செயல்களில் இராஜதந்திர ஈடுபாடு தொடர்காக முழுமையான விபரங்களை பொதுவெளியில் வெளிவிடவில்லை.
கனடாவின் பொறுப்பு உயர் ஸ்தானிகர் ஸ்டீவர்ட் ரோஸ் வீலர்இ துணை உயர் ஸ்தானிகர் பேட்ரிக் ஹெபர்ட் மற்றும் நான்கு இராஜதந்திரிகள் அக்டோபர் 19 ஆம் தேதி 11:59 p.அ. க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கனடாவின் இந்த நகர்வு தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில்இ இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதம், வன்முறை மற்றும் பிரிவினைவாதத்திற்கு ட்ரூடோ அரசாங்கத்தின் ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையில் மேலும் நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
துணை ஆணையர் மார்க் ஃப்ளின் சமீபத்தில் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்திய அரசாங்க முகவர்களின் ஆதாரங்களை முன்வைக்க உயர் இந்திய சட்ட அமலாக்கத்துடன் சந்திக்க முயன்றார்இ ஆனால் தோல்வியடைந்தார்.
கடந்த இலையுதிர்காலத்தில்இ பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரா அருகே ஜூன் 2023 இல் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய காலிஸ்தானி ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் முகவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை கனடா வெளிப்படுத்தியதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவலை வெளிப்படுத்தினார்.
அணடமைக்காலமாக இருதரப்பு உறவுகள் முடுக்கிவிடப்பட்டு, பதட்டங்கள் குறையத் தொடங்கியபோதும் அவை ஒருபோதும் உண்மையிலேயே முழுமையாக மீளவில்லைஇ இப்போது மீண்டும் வெளிநாட்டு தலையீடு காரணமாக இருதரப்பபு உறவில் பாரிய விரிசல் விழுந்துள்ளதாகவே நோக்கப்படுகன்றது.
இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான முடிவு நிஜ்ஜார் வழக்கில் தொடுர்புபட்ட ஆறு நபர்களை அடையாளம் கண்டுகொள்ள போதுமானஇ தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று வெளியுறவு மந்திரி மெலானி ஜோலி திங்களன்று கூறினார்.
கனடாவில் காலிஸ்தானிய ஆர்வலர்களின் நடவடிக்கைகள் நீண்ட காலமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சவாலாகவே இருந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் கொலைகளிலும், மிரட்டி பணம் பறித்தல் போன்ற பிற குற்றச் செயல்களிலும் ஈடுபட்ட கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் மீது போலீசார் குற்றத் தாக்கல் செய்துள்ளனர் என்றும் டுஹெம் கூறினார். இராஜதந்திர விலக்கு நீக்குவது குறித்து அரசாங்கம் உள் விவாதங்களை நடத்தியதுஇ எனவே காவல்துறை சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் அதிகாரிகளை நேர்காணல் செய்யலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில் வெற்றி பெறவில்லை என்று அவர் கூறினார்.
கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் இந்தியா தலையிட்டதற்கான ஆதாரங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர் என்றும் டுஹெம் கூறினார்.
லெபனான் மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் இரண்டாவது வாரமாக தொடர்கிறது. அதே சமயம் இஸ்ரேலின் போர் ஓராண்டைக் கடந்து தொடர்கிறது.
வியாழன் (அக்டோபர் 10) இரவு பெய்ரூட்டில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா., அமைதி காக்கும் படையினர் காயமடைந்தனர். போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டதற்கு இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியாவில் நடக்கும் மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்கு புதிய தாக்குதல் நடைபெற்றது.
இவை அனைத்திற்கும் மேலாக, இரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறது. ஆனால், இஸ்ரேலின் நட்பு நாடுகள் நிதானத்தை வலியுறுத்துகின்றன.
ஆனால், இஸ்ரேல் அதன் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதேசமயம், பல தரப்புகளில் இருந்து வரும் போர் நிறுத்தம் தொடர்பான அழுத்தங்களையும் எதிர்த்து வருகிறது. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன:
சுலைமானி படுகொலையை தள்ளி நின்று பாராட்டிய இஸ்ரேல்
இரானிய ஜெனரல் காசிம் சுலைமானி 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸிலிருந்து இரவு நேர விமானத்தில் இராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
சுலைமானி இரானின் ஆக்ரோஷமான குட்ஸ் படையின் தலைவராக இருந்தார். இது வெளிநாட்டு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற இரானின் புரட்சிகர காவலர் படையின் ரகசியப் பிரிவு.
ஜெருசலேம் என்று பொருள்படும் இந்த குழு, இராக், லெபனான், பாலத்தீனப் பகுதிகள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள வெளிநாடுகளுக்கு ஆயுதம், பயிற்சி, நிதி மற்றும் பினாமி படைகளை வழங்கும் பொறுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தச் சமயத்தில், இரானில் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு அடுத்தபடியாக சுலைமானி இரண்டாவது சக்திவாய்ந்த நபராக இருந்தார்.
சுலைமானியின் வாகன அணிவகுப்பு விமான நிலையத்தை விட்டு வெளியேறி வந்ததும், அதன் மீது ட்ரோன் மூலமாக ஏவுகணைகள் ஏவப்பட்டன. அதில் சுலைமானி கொல்லப்பட்டார்.
சுலைமானி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தது இஸ்ரேல் உளவுத்துறை என்றாலும், தாக்குதல் நடத்திய ட்ரோன் அமெரிக்காவிற்கு சொந்தமானது.
இந்தத் தாக்குதலுக்கான உத்தரவை வழங்கியது அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அல்ல.
சுலைமானி கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு, முன்னாள் அதிபர் டிரம்ப் பின்னர் ஒரு உரையில், “நெதன்யாகு எங்களைக் கைவிட்டார் என்பதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்,” என்று கூறினார்.
டிரம்ப் ஒரு நேர்காணலில், ‘அந்தத் தாக்குதலில் இஸ்ரேல் மிகவும் தீவிரமான பங்கு வகிக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும்’, ‘அமெரிக்காவின் கடைசி சிப்பாய் எஞ்சியிருக்கும் வரை இரானுடன் அமெரிக்கா தொடர்ந்து போராட வேண்டும் என்று நெதன்யாகு விரும்புகிறார்’ என்றும் புகார் கூறினார்.
டிரம்ப் கூறிய இந்தக் கருத்துக்கள் அந்தச் சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆனாலும், சுலைமானி படுகொலையை நெதன்யாகு பாராட்டினார். அவரைப் பொருத்தவரை, இந்தப் படுகொலைச் சம்பவத்தில் ஒருவேளை இஸ்ரேலிய அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இருந்தால், இஸ்ரேலுக்கு எதிரான பெரிய அளவிலான தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று கருதினார். இரான் அல்லது லெபனான், பாலத்தீனப் பகுதிகளில் இருக்கும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களிடமிருந்து பெரியளவிலான எதிர்வினை வந்திருக்கும் என நெதன்யாகு நினைத்தார்.
தொடரும் தாக்குதல்
இஸ்ரேல் இரானுடன் ஒரு மறைமுகப் போரை எதிர்கொண்டது. ஆனால் இரு தரப்புமே போரை மட்டுப்படுத்துவதில் கவனமாக இருந்தன. பெரிய அளவிலான மோதலுக்கு இருதரப்பும் தயாராக இல்லை.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பெஞ்சமின் நெதன்யாகு, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகக் கட்டடத்தைத் தாக்குமாறு இஸ்ரேலிய விமானப் படைக்கு உத்தரவிட்டார். அதில் இரண்டு இரானிய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்.
பின்னர் ஜூலை மாதம், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் இறந்த ஹெஸ்பொலாவின் உயர்மட்ட ராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்கரை படுகொலை செய்யவும் நெதன்யாகு உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் மூத்தப் பத்திரிகையாளர் பாப் உட்வார்டின் புதிய நூலில் பதிவு செய்யப்பட்டிருப்பதன் படி, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தச் சம்பவங்கள் குறித்து மிகவும் கோபமாக இருக்கிறார்.
அமெரிக்க அதிபர்களின் மாறுபட்ட நிலைப்பாடு
வெள்ளை மாளிகை பல மாதங்களாக முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வந்த மோதலைத் தூண்டுவதில் இஸ்ரேலியப் பிரதமர் ஈடுபட்டதை அறிந்து அதிபர் ஜோ பைடன் கோபமடைந்ததாக அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
“இஸ்ரேல் ஒரு முரட்டுத்தனமான நாடு, அங்கு வசிப்பவர்கள் முரட்டு குணம் கொண்ட மக்கள் என்ற கருத்து இஸ்ரேலைச் சுற்றி இருக்கும் நாடுகள் மத்தியில் அதிகரித்து வருகிறது,” என்று அதிபர் பைடன் கூறினார்.
நெதன்யாகுவை ஒரு அமெரிக்க அதிபர் (டிரம்ப்) மிகவும் ‘எச்சரிக்கையாக இருக்கிறார்’ என்று குறிப்பிட்டார். அவருக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வந்த மற்றொரு அமெரிக்க அதிபர் (பைடன்) நெதன்யாகுவை மிகவும் ‘ஆக்ரோஷமானவர்’ என்று விமர்சித்தார்.
இந்த இரண்டு நிலைப்பாடுகளின் மிகவும் தீர்க்கமான திருப்புமுனை 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தால் ஏற்பட்டது. இது இஸ்ரேலின் வரலாற்றில் கொடூரமான நாளாகும். இஸ்ரேலின் அரசியல், ராணுவ, மற்றும் உளவுத்துறையின் தோல்விகளை அந்த தினம் அம்பலப்படுத்தியது.
நெதன்யாகு அமெரிக்க அதிபரின் பேச்சைக் கேட்கவில்லை என்பதுதான் இரு நிலைப்பாடுகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை.
இஸ்ரேலின் போர் தொடர்பாக சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் தாக்குதல்களின் தீவிரம் மற்றும் இஸ்ரேலிய சமூகத்தின் மீதான அதன் தாக்கம், அதன் பாதுகாப்பு உணர்வு ஆகியவை இஸ்ரேலின் எதிர்வினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கிறது.
அமெரிக்க நிர்வாகம் இஸ்ரேலுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குகிறது. ஆனால் பாலத்தீனத்தில் பொதுமக்களின் மரணங்கள் மற்றும் காஸாவின் துயரமான சூழல் ஆகியவை அமெரிக்காவைச் சங்கடப்படுத்தியது. அதன் நிர்வாகத்திற்கு அரசியல் ரீதியாகத் தீங்கு விளைவிக்கும் என அமெரிக்கா கருதியது.
அமெரிக்காவிடமிருந்து அதிக மானியங்களைப் பெறும் ஒரு நாட்டை வல்லரசு நாட்டால் கட்டுப்படுத்த முடியாத நிலை, அமெரிக்காவின் விமர்சகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
ஆனாலும், ஏப்ரலில் இரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது, அந்த ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு அமெரிக்கப் போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. இஸ்ரேலின் பாதுகாப்பு அதன் மிகப்பெரிய கூட்டாளிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இது பிரதிபலிக்கிறது. ஆனால், இஸ்ரேல் போரின் போக்கை மாற்றும் அழுத்தங்களை கண்டுகொள்ளவில்லை.
இந்த வருடம், அமெரிக்காவின் அனுமதியின்றி ஹெஸ்பொலாவுடன் மோதலை அதிகரிக்க இஸ்ரேல் முடிவு செய்தது.
நீண்ட காலம் இஸ்ரேல் பிரதமராக இருந்துவரும் நெதன்யாகுவுக்கு அமெரிக்காவின் அழுத்தத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியும். அதை முற்றிலும் புறக்கணிக்காவிட்டாலும், அதைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பதை தனது 20 ஆண்டு கால அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார்.
குறிப்பாக, தேர்தல் நடக்கும் சமயத்தில், அமெரிக்கா தனது போக்கில் இருந்து விலகும்படி கட்டாயப்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதை நெதன்யாகு அறிவார். அவர் எப்போதும் இதை நம்புகிறார். அதே நேரம், இஸ்ரேல் அமெரிக்காவின் எதிரிகளுடன் போராடுகிறது என்பது அதற்குத் தெரியும்.
சமீபத்திய மோதலைப் பொருத்தவரை, நெதன்யாகு இஸ்ரேலிய அரசியல் போக்கிலிருந்து விலகிச் செயல்படுகிறார் என்று கருதுவது தவறானது. ஏதாவது அழுத்தம் ஏற்பட்டால், ஹெஸ்பொலாவுக்கு எதிராக மட்டுமல்ல, இரானுக்கு எதிராகவும் அவர்கள் வலுவான தாக்குதலை நடத்த வேண்டியிருக்கும்.
கடந்த மாதம், அமெரிக்காவும் பிரான்சும் லெபனான் தொடர்பான போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை முன்வைத்த போது, இந்த 21 நாள் போர் நிறுத்தத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பு இஸ்ரேலிடம் இருந்து வந்தது. எதிர்ப்பு தெரிவித்ததில் இஸ்ரேலின் முக்கிய இடதுசாரிப் பிரிவுகள் மற்றும் வலதுசாரிக் கட்சிகளும் அடக்கம்.
தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் இப்போது தனது போரைத் தொடர்வதில் உறுதியாக உள்ளது. ஏனெனில், அது சர்வதேச அழுத்தங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும் என்று கருதுவதால் மட்டுமல்ல, அச்சுறுத்தல்களுக்கான சகிப்புத்தன்மை அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகு மாறிவிட்டது.
பல ஆண்டுகளாக, வடக்கு இஸ்ரேலில் உள்ள கலிலியில் தாக்குதல் நடத்துவதை ஹெஸ்பொலா இலக்காகக் கொண்டுள்ளது. இப்போது இஸ்ரேலிய மக்கள் ஆயுதமேந்திய பலர் தங்கள் வீடுகளுக்குள் நுழையும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர், இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியாது, அது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
அச்சுறுத்தல் பற்றிய இஸ்ரேலின் பார்வையும் மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளில், ஒரு பரவலான போரைத் தூண்டக்கூடிய பல சம்பவங்கள் நடந்துள்ளன. உதாரணமாக டெஹ்ரான், பெய்ரூட், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் ஆகிய நகரங்கள் மீதான குண்டுகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்.
டெஹ்ரானில் இரானின் விருந்தினராக இருந்தபோது ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் படுகொலை செய்தது. இது ஹசன் நஸ்ரல்லா உட்பட ஹெஸ்பொலாவின் முழு தலைமையையும் நீக்கியது. சிரியாவில் உள்ள தூதரகக் கட்டடத்தில் இருந்த இரானிய மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
ஹெஸ்பொலா இதுவரை 9,000 ஏவுகணைகளை இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவியுள்ளது. டெல் அவிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமும் அது தாக்குதல் நடத்தியது. இரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதிகளும் இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவுகணைகளை ஏவியுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ராணுவத்தால் இடைமறித்து அழிக்கப்பட்டன.
கடந்த ஆறு மாதங்களில் இஸ்ரேல் மீது இரான் ஒரு முறை அல்ல இரண்டு முறை பெரியளவிலான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த இரண்டு தாக்குதல்களிலும் அது 500 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் மீது தரைவழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது கடந்த காலத்தில் நடந்திருந்தால், இந்தச் சம்பவங்களில் ஏதேனும் ஒன்று கூட பரவலான பிராந்திய யுத்தத்திற்கு வழிவகுத்திருக்கும். கடந்த காலங்களில் பொதுவாக எச்சரிக்கையாக இருந்து ஆபத்துகளைத் தவிர்த்து வந்த நெதன்யாகுவின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.