April 22, 2026

தென்னிலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: 7 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடு – ‘சூத்திரதாரிகளைத் தப்பவிடாதீர்கள்’- பேராயர் கோரிக்கை!

இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாகப் பதிவான ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகள் நடந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தத் துயரமான தினத்தை முன்னிட்டுஇ கொழும்பில் நடைபெற்ற விசேட ஆராதனையில் உரையாற்றிய கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் (ஆயடஉழடஅ ஊயசனiயெட சுயதெiவா)இ இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றக் கோரி மிகக் காட்டமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

நீதிக்காகக் காத்திருக்கும் 270 உயிர்கள்

கடந்த 2019 ஏப்ரல் 21 அன்றுஇ ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த ஒன்பது தற்கொலை பயங்கரவாதிகள்இ மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகள் மீது கோரத் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் 11 இந்தியர்கள் உட்பட சுமார் 270 பேர் உயிரிழந்தனர்; 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஏழு ஆண்டுகள் கடந்தும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த சூத்திரதாரி யார் என்பது இன்னும் மர்மமாகவே இருப்பது பலத்த சந்தேகங்களையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.

“பதவிகள் முக்கியமல்ல – சட்டம் முக்கியம்” – பேராயர் முழக்கம்

தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவு தின விசேட திருப்பலியில் உரையாற்றிய கர்தினால் ரஞ்சித் விசாரணைகளை முடக்க ஒரு பிரிவினர் முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.

“அரசியல் அதிகாரம், பாதுகாப்புத் துறை அல்லது வணிகத் துறை என எந்த உயரிய பதவியில் இருந்தாலும் சரி, அவர்களுக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இருந்தால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் கடந்த காலத்தில் செய்த சேவைகளை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களைத் தப்பவிடக் கூடாது” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சல்லே மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் குறித்த மறைமுகமான விமர்சனமாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்தியப் புலனாய்வு அமைப்புகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் ஏன் பாதுகாப்புத் துறையினர் அதைத் தடுக்கவில்லை என்ற கேள்வியையும் அவர் மீண்டும் எழுப்பியுள்ளார்.

புதிய அரசும் ‘நிழல் உலக’ தடைகளும்

2024-ல் பதவியேற்ற அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்த விவகாரத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கர்தினால் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஆயினும்இ “நிழல் அரசு” (Deep State) என அழைக்கப்படும் அமைப்பின் சில உயர் அதிகாரிகள் இன்னமும் விசாரணைகளைச் சீர்குலைக்கத் திட்டமிட்டு வருவதாக அவர் எச்சரித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதே அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதாகும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலதிக செய்திகள்